Saturday, January 16, 2010

பாடல் புத்தகம் வெளியீட்டு விழா

தமிழர் திரு நாளாம் பொங்கல் திரு நாளை கொண்டாடும் தைத்திங்கள் முதலாம் நாளிலே சாந்திநகர் குழ்ந்தை இயேசு திருத்தலத்தின் திருநாளையும் கொண்டாடுகிறோம். அத்தகைய மகிழ்ச்சிகரமான் நாளிலே குழந்தை இயேசு இளையோர் இயக்கத்தின் சார்பாக மேதகு ஆயர் ஜூட் பால்ராஜ் அவர்களின் கரங்களினால் பாலன் இயேசு பாமலர் எனும் பாடல் புத்தகம் வெளியிடப்பட்டது.

ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளுக்கும் மேலான முன் முயற்சியினாலும், முன்னாள் இளையோர் இயக்கத்தினரின் பேரூதவியினாலும் இம்முயற்சி வெற்றியடைந்தது. பங்குத்தந்தை ரெக்ஸ் ஜஸ்டின்  அடிகளாரின் சிறந்த ஆலோசனைகளும் , ஆயர் அவர்களின் அனுமதியும் இளையோருக்கு பெரும் ஊக்கத்தை அளித்து பாலன் இயேசு பாமலர் மக்கள் கரங்களில் தவழவும், இறைவனைப் புகழ்ந்து பாடவும் உறுதுணையாய் அமைந்தது.

Saturday, January 2, 2010

புத்தாண்டு பரிசு குலுக்கல்

குழ்ந்தை இயேசு இளையோர் இயக்கத்தினர் சாந்தி நகரில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வரும் புத்தாண்டு பரிசு குலுக்கலானது இந்த ஆண்டும் சிறப்புற நடந்தேறியது.

விழா நிகழ்வுகள் :