Sunday, August 23, 2009

வாழ்த்துவோம் !!!

இளைஞர்களுக்கு மகிழ்ச்சி தரும் நிகழ்வு ஒன்று இனிதே நடந்தேறியுள்ளது. ஆம் அகில உலக கிறிஸ்தவ அமைப்பு (IYCS), அகில உலக கத்தோலிக்க அமைப்பு(ICO) மற்றும் அகில உலக அரசு சாரா அமைப்பு(NGO) ஆகியவற்றின் புதிய ஒருங்கிணைப்பாளராக சென்னை - மயிலை உயர் மறை மாவட்டத்தின் ஆர். . புரம் பங்கின் ஒருங்கிணைப்பாளர் தீபக் நியமிக்கப்பட்டுள்ளார். நமது தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் இத்தகைய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது நமது இளைஞர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் விஷயமாகும்.

அவரை நமது இளைஞர் இயக்கத்தின் சார்பாக வாழ்த்துகிறோம். பல்வேறு நாடுகளின் இளைஞர் அமைப்புக்களை ஒருங்கிணைக்கும் அவரோடு இணைந்து, அவர் கருத்துக்களை அறிந்து செயலாற்ற நாமும் விழைவோம்.

நன்றி:
நம் வாழ்வு
23 -08 -2009