

நண்பா!
எழு விழித்திடு இலக்கு அடையும் வரை நிற்காதே!
வாழ்வின் ஓட்டத்தில் தடைகள் வந்தாலும் தகர்த்தெறி!
மீண்டும் எழுந்து ஒழி வீச - வாழ - வளர வாழ்த்துரை ஏற்க -
வரலாறு படைக்க வீறு கொண்டெழு!
என்னத்தை படைப்பாக்க!
சமுதாயத்தைச் செம்மையாக்க!
மனிதத்தை வளமாக்க வாராய்!
இளைஞனே.........
சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கிய மயிலை மறை மாவட்ட பேராயர் ஏ.எம்.சின்னப்பா தெரிவித்துள்ளதாவது:
விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் நடைபெறும் போரில் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கு ஆழ்ந்த வேதனையையும் வருத்தத்தையும் தெரிவித்து கொள்கிறோம்.
இராணுவம் தமிழ் மக்கள் வசிக்கும் பாதுகாப்பு பகுதிகளிலும், மருத்துவமனை, தேவாலயம் ஆகியவற்றின் மீதும் குண்டுகள் வீசுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.
ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என பல்வேறு நாடுகள் கூறியும் அரச தலைவர் ராஜபக்சவும் மற்றவர்களும் கேட்கவில்லை.
சிறு குழந்தைகள், பெண்கள், வியாதி வந்தவர்கள் என நூற்றுக்கணக்கில் கொல்லப்படுகின்றனர்.
தீவிரவாதத்தை அழிக்கிறோம் என்பதை ஒரு சாக்காக வைத்து தமிழ் மக்களை அழிக்க நினைக்கின்றனர். அங்கு தமிழ் மக்கள் உரிமையோடும், மனித மாண்போடும் வாழ போர் நிறுத்தம் செய்து அரசியல் ரீதியான தீர்வு கண்டால் மட்டும் போதாது. தமிழர்களுக்கு தனிப்பட்ட இடம் கொடுக்க வேண்டும்.
தனி ஈழம் அமைந்தால்தான் தமிழர்களை காப்பாற்ற முடியும்.
மிகச்சிறிய நாடான இஸ்ரேல், பாலஸ்தீனர்களுக்காக ஒரு சிறு பகுதியை ஒதுக்கி கொடுத்துள்ளது. இதனால் இலங்கையில் மக்களின் தனித்தன்மை, தேவைக்கு ஏற்ப தமிழீழம் கொடுக்கப்பட வேண்டும்.
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்திய அரசும், ஐக்கிய நாடுகள் சபையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருந்துப் பொருட்கள் சீராக கிடைத்திட ஆவன செய்ய வேண்டும் என்றார் அவர்.
பொதுவாகவே சுற்றுலா என்றவுடன் மனம் தன்னாலே துள்ளிகுதிக்க ஆரம்பித்துவிடும். ஏனெனில் சுற்றுலா மனதிற்கு ஒரு மலர்ச்சியும் புதிய எண்ணங்களையும் தரக்கூடிய ஒன்று. அரசாட்சிக் காலத்திலும் சரி, முடியாட்சிக் காலத்திலும் சரி ஆட்சியாளர்களும், ஏன் அடித்தட்டு மக்களும் தங்களை புதிப்பித்துக்கொள்ள பயணங்கள் ஒரு இனிய வாய்ப்பாகவே அமைந்து வந்திருக்கிறது. திரை கடல் ஓடி திரவியம் தேடு என்பது தமிழ் மூதாட்டியின் சிறப்பானதொரு அறிவுரை. திரை கடல் ஓடாவிட்டாலும், புதியதொரு சுற்றுச்சூழல், பழக்கவழக்கங்களை உரிய மற்றுமொரு இடத்திற்கு செல்வது கூட புதிய அனுபவத்தை தரக்கூடிய ஒன்று.
அப்படிப்பட்ட சுற்றுலாவிற்கு குழந்தை இயேசு இளையோர் இயக்கத்தினராகிய நாங்களும் சென்று வந்துள்ளோம். ஆம் தமிழ் மண்ணின் மலர்ச்சிமிகு பசுமை பூமியான கொடைக்கானலுக்கு சென்றோம். பசுமையின் அழகினை இரசித்த அதே வேளையில் இறைவனின் அருளையும் பெற தவறவில்லை. மதிய வேளையில், நீண்ட நாட்களாக நிலவி வந்த பணிமூட்டமிகு சூழல் திங்கட்கிழமையான இன்று இல்லாமைக்கு இறைவனுக்கு நன்றி செலுத்தி திருப்பலியில் அனைவரும் பங்கு கொண்டோம். திருப்பலி நிறைவேறிய பின்னர், முன் தினம் இளையோரே சமைத்த சுவைமிகு உணவை உண்டோம்.
மாலை ஆறு மணியளவில், அனைவரும் ஊருக்கு திரும்ப ஆயாத்தமாகிய தருணத்தில் அதுவரை வெளி வராத பனி மூட்டம் வந்தது, எங்களை வாழ்த்தி வழி அனுப்புவதாக அமைந்தது.
படங்கள்: